கொரோனா தடுப்பூசி டெண்டர் கோராத நிறுவனங்கள்.. மத்திய அரசை குறை கூறுவது அபத்தம்.. மா சுப்பிரமணியன்
உதகை: கொரோனா தடுப்பூசி குறித்து எந்த நிறுவனமும் இதுவரை ஒப்பந்தப் புள்ளியை எடுக்க முன்வரவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்த உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்து உலகளாவிய டெண்டரை கோரியுள்ளது. இதன் மூலம் 5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி தேவை அதிகம் இருப்பதால் உலக அளவில் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. கடந்த மே 12 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

ரூ 2 கோடி
அதன்படி 5 கோடி தடுப்பூசிகளை ரூ 2 கோடிக்கு ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டன. மேலும் 90 நாட்களுக்குள் தடுப்பூசிகளை டெலிவரி செய்யும் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்தது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை அண்ணாசாலையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்திலும் கடலூர், தஞ்சை, திருச்சி, சிவகங்கை, நெல்லை, வேலூர், சேலம் மற்றும் கோவை ஆகிய மாவட்ட தடுப்பூசி கிடங்குகளிலும் டெலிவரி செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

தட்டுப்பாடுகள்
கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் சமயோஜிதமாக யோசித்து உலகளவில் டெண்டர் கோரியது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் டெண்டர் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் உதகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

டெண்டர்
அப்போது அவர் கூறுகையில் கொரோனா தடுப்பூசிக்காக உலகளவில் டெண்டர் கோரிய நிலையில் டெண்டரை எடுக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை. இது போன்று எந்த நிறுவனங்களும் டெண்டரை பெற முன்வராததற்கு மத்திய அரசுதான் காரணம் என கூறுவது அபத்தமாக இருக்கும்.

பக்குவம்
முதல்வருடன் ஆலோசித்து விரைவில் மீண்டும் ஒரு முறை டெண்டர் கோரப்படும் என்றார் மா சுப்பிரமணியன். தொட்டதற்கெல்லாம் மத்திய அரசை குற்றம்சாட்டாமல் நிருபர்களே இந்த கேள்வியை கேட்ட பிறகும் மத்திய அரசை குறை கூறுவது அபத்தம் என கூறியது அமைச்சரின் பக்குவத்தையே காட்டுவதாக கூறுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications