கொடுங்கையூரில் அநியாயமாக பலியான சிறுமிகளுக்கு அஞ்சலி செலுத்திய ஜெயக்குமார்.. மக்கள் கொந்தளிப்பு!
சிறுமிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: கொடுங்கையூர் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை கொடுங்கையூரில் எம்.ஜி.ஆர் நகரில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த பாவனா, யுவஸ்ரீ ஆகியோர் மிதித்ததில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலியான சிறுமிகள் இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மின் கம்பி அறுந்தது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததன் அலட்சியத்தாலேயே சிறுமிகள் பலியாகி உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமிகளின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று மருத்துவமனைக்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இரண்டு உயிர்களை காவு கொண்ட பிறகே பழுதடைந்த நிலையில் இருந்த மின்சார பெட்டி சரி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமிகளின் உடல் கொடுங்கையூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்றார். கவனக்குறைவாக யார் செயல்பட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அலட்சியமாக செயல்பட்டவர்களை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் கொடுங்கையூருக்கு ஆறுதல் கூற வந்த போது, பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டனர். கொடுங்கையூரில் பழுதடைந்துள்ள மின்பெட்டிகளை உடனே சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அப்போது அனைவரையும் அமைதிபடுத்தினார் அமைச்சர் ஜெயக்குமார்.
மக்கள் கோரிக்கைதான் வைத்தனர். பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க கூறினார்கள். மழை நின்ற உடன் சரி செய்து தருவதாக கூறியுள்ளேன் என்று தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குடார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications