ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அப்படி என்ன சிக்கல்?.. என்ன சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்!
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் நீர்வழிப்பாதைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஜனநாயக ரீதியில் பல்வேறு சிக்கல் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் மழை நீர் பாதித்த பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த 5 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை சமன் செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்தலாமா என்று அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மழைநீர் வேடியாமல் இருப்பதற்கு ஆக்கிரமிப்புகள் காரணம் என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஜனநாயக ரீதியில் பல்வேறு சிக்கல் உள்ளது. மழை பாதிப்புகளை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் இருந்தாலும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாகப்பட்டினத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வடிகால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சொன்னால் உயிர்போய்விடும், சொல்லாவிட்டால் தலைபோய்விடும் என்ற நிலையில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையனும் ஒப்புகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமே. அதையே தடுக்கும் வகையில் அப்படி என்னதான் சிக்கலோ!
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications