நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் அவசர சட்டம் மத்திய அரசிடம் நாளை தாக்கல்- அமைச்சர் விஜயபாஸ்கர்
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் அவசர சட்டம் மத்திய அரசிடம் நாளை தரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் புதிய அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் நாளை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அந்த தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு எத்தனையோ முறை கோரிக்கை விடுத்துவிட்டது. ஆனால் நிரந்தரமாக விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.
சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி அவசர சட்ட வரைவை மத்திய அரசிடம் கொடுத்தது. அது இன்னமும் நிலுவையில் உள்ளது.

தொடர்ந்து வலியுறுத்தல்
இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு தகர்க்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை எடுத்துரைத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடி, சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவிடமும் கோரிக்கை விடுத்தனர்.

ஏமாற்றம்தான்...
அப்போது அவசரச் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதால் அன்றைய தினமே நீட் தேர்வுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று கல்வியாளர்கள் எண்ணினர். எனினும் அது நடக்கவில்லை.

ஓராண்டுக்கு விலக்கு
இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில், நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்குக் கோரி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரும். ஆனால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை என்றார்.

நாளை தாக்கல்
இதைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் ஆலோசனை நடத்தினார். அதன்பின்பு விஜயபாஸ்கர் கூறுகையில், நீட்டுக்கு ஓராண்டு விலக்கு கோரும் புதிய அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் நாளை தாக்கல் செய்யப்படும். இதற்காக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று இரவு டெல்லி செல்ல இருக்கிறார் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications