நீட் சட்டச்சிக்கலை நீக்க தொடர் ஆலோசனை... விரைவில் மேல்முறையீடு: விஜயபாஸ்கர்!
நீட் விவகாரத்தில் உள்ள சட்டசிக்கல்களை களைவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 85 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சட்டச்சிக்கல்களைக் களைவது தொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசு கடந்த 22-ந்தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் உள்ள இடங்களில் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கப்படும்' என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த தனி நீதிபதி அரசின் உள்ஒதுக்கீடு அரசாணை ஒருதலைபட்சமாக இருப்பதால் அதனை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இரண்டு நபர் நீதிமன்ற அமர்வுக்கு அரசு மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி மூர்த்தி ராமமோகனராவ், தண்டபாணி அமர்வு தனி நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்றே கூறியது. இதனால் மாணவர் சேர்க்கைக்கு அரசு பிறப்பித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்று அர்த்தமானது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
Recommended Video

நீட் விவகாரத்தில் உள்ள சட்டச்சிக்கல்களை களைய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து நீட் தேர்வில் விலக்கு கோரியுள்ள நிலையில் 3 நாட்களில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications