காவலாளி கொலை... இப்போது யார் வசம் கொடநாடு?... மு.க.ஸ்டாலின் கேள்வி
காவலாளி கொலை செய்யப்ப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களா தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்று தி.மு.க செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை தோட்டங்கள் சூழ பிரம்மாண்டமான பங்களா கொடநாட்டில் உள்ளது. இந்த பங்களாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் காவல் பணியில் ஈடுபட்டிர்ந்த ஓம் பகதூர் என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதே போன்று நள்ளிரவில் காரில் வந்த மர்ம கும்பல் மற்றொரு காவலாளியான கிஷன் பகதூரையும் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

மர்ம நபர்கள் கொடநாடு பங்களாவில் கொள்ளையை நிகழ்த்திவிட்டு தப்பிக்கும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காவலர் கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உண்மையில் நடைபெற்ற நிலவரம் குறித்து மற்றொரு காவலர் கிஷன் உயிர் பிழைத்து கூறினால் தெரிய வரும்.
இந்நிலையில் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்தின் மூலம் கொடநாடு பங்களா யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளதாகக் கூறினார். மேலும் கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications