அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கவில்லை- பொறுத்திருந்து பாருங்கள்: கூவத்தூரில் சசிகலா
அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிறையில் அடைத்து வைக்கவில்லை; அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றனர் என அக்கட்சி இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கவில்லை- எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர் என அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தெரிவித்துள்ளார்.
கல்பாக்கம் அருகே கூவத்தூரில் 90 அதிமுக எம்.எல்.ஏக்களை மன்னார்குடி குண்டர்கள் கட்டுப்பாட்டில் சசிகலா சிறை வைத்துள்ளார். கூவத்தூர் ரிசர்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Let it come, I will see: VK Sasikala when asked about the pending verdict in DA Case pic.twitter.com/EPBZx5Nkop
— ANI (@ANI_news) February 12, 2017
Please wait and see our next move: V K Sasikala. #TamilNadu pic.twitter.com/QUCkVjaVv2
— ANI (@ANI_news) February 12, 2017
இதனால் கடந்த 2 நாட்களாக கூவத்தூருக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் சசிகலா கெஞ்சி வருகிறார். இன்றும் கூவத்தூருக்கு சசிகலா சென்றார். அப்போது மன்னார்குடி குண்டர்கள், செய்தியாளர்களைத் தாக்கினர்.
இதனால் சசிகலாவின் காரை வழிமறித்து செய்தியாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பறிக்கப்பட்ட செல்போன்கள், கேமராக்கள் ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார்.
You can see truth that non of our MLAs have been forcibly kept here, we are living here as a family: #VKSasikala pic.twitter.com/XaEiwEpBWV
— ANI (@ANI_news) February 12, 2017
அப்போது சசிகலா கூறியதாவது:
அதிமுக ஆட்சிக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதில் எம்.எல்.ஏக்கள் உறுதியாக உள்ளனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் சிறை வைக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களின் சிறு குழந்தைகளை கடத்துவோம் என மிரட்டல் விடுக்கின்றனர்.
எம்.எல்.ஏக்கள் தொடர்பாக பொய் செய்திகள் பரப்புவது யார் என்பது எங்களுக்குத் தெரியும். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்போது வரட்டும். வருவதற்கு முன்னரே ஏன் பேசவேண்டும்.
இவ்வாறு சசிகலா கூறினார்.
-
வடக்கே வன்னியர்..தெற்கே தேவர்! 3 பேருக்கு செக்.. அய்யா ராமதாஸை வைத்து சின்னம்மா சசிகலா போடும் கணக்கு -
Sasikala: சசிகலா கட்சி பெயர் அஇபுதமமுக! சட்டசபை தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டி -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
Ramadoss: "எங்களுக்கு யார் ஓட்டு போடுவா?இது சரிபட்டு வராதும்மா!" சசிகலாவுக்கு நோ சொன்ன ராமதாஸ்! -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
Jayalalitha: "அஇபுதமமுக"! ஆமா, ஜெயலலிதாவின் பெயரை சசிகலா தவிர்த்தது ஏன்? இந்த 5 காரணங்கள்தானா? -
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
விசில் + தென்னந்தோப்பு.. விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? சசிகலா நேரடியாக சொன்ன பதில்! -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார்












Click it and Unblock the Notifications