சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து.... கடுமையான போக்குவரத்து நெரிசல்!
சென்னை பாரிமுனைப் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கி அருகில் உள்ள சுரங்கப்பாதைக்குள் மாநகரப் பேருந்து சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை :சென்னை ரிசர்வ் வங்கி அருகில் உள்ள சுரங்கப்பாதைக்குள் மாநகரப் பேருந்து சிக்கிக் கொண்டதில் பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி தப்பினர். எனினும் பேருந்து வழியை மறித்து நின்றதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை கண்ணகி நகரில் இருந்து பிராட்வே வந்த 102 கே மாநகரப் பேருந்து ரிசர்வ் வங்கி அருகில் உள்ள சுரங்கப்பாதைக்குள் சென்ற போது தறி கெட்டு ஓடியுள்ளது. ஸ்டியரிங் லாக் ஆகிவிட்டதால் கட்டுப்பாட்டை இழந்து சுரங்கப்பாதை சுவற்றில் மோதி பேருந்து நட்டநடு ரோட்டில் நின்றுள்ளது.

இந்தப் பேருந்தில் 35 பயணிகள் பயணித்துள்ளனர், அதிர்ஷ்டவசமாக நடத்துநர் மற்றும் பயணிகளும் காயங்களின்றி தப்பித்துள்ளனர். பேருந்து மோதிய வேகத்தில் ஓட்டுனர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9.30 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் பணியில் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு பேருந்துகள் அகற்றப்பட்டன. சுரங்கப்பாதையில் தற்போது பேருந்துகளும் வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications