தமிழர் பாசறையினர் சின்னத்தை மநீமவிற்கு விட்டு கொடுத்துட்டாங்க - கமல்
மக்கள் நீதி மய்யத்திற்கு தமிழர் பாசறையினர் சின்னத்தை விட்டுக்கொடுத்து விட்டனர் என்று கட்சியின் நிறுவனர் தலைவர் கமல் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: மும்பை தமிழர் பாசறையினர் தங்கள் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு விட்டு கொடுத்து விட்டதாக அக்கட்சியின் நிறுவனர் கமல் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ஆம் தேதியன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். மதுரையில் கட்சியின் பெயரை தொடங்கியதோடு, கட்சியின் சின்னம், கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
கட்சி சின்னத்தில் இணைந்துள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், நட்சத்திரங்களின் முனைகள் மக்களையும் குறிக்கும் என்றும் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

மறுநாளே கமலின் கட்சி, கொடி சின்னத்தையும் காப்பி என்று பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்தனர். மும்பை தமிழர் பாசறையின் கொடியில் இருந்து மநீம கட்சிக்கொடி சுட்டது என்றும் கட்சி பெயரை எந்த படத்தில் இருந்து சுட்டார் என்று தெரியலையே என்றும் கேட்டனர்.
இந்த நிலையில் மும்பை தமிழர் பாசறையினர் சின்னத்தை விட்டுக்கொடுத்து விட்டனர் என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல் கூறியுள்ளார். ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த மும்பை சென்ற கமல், விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர், சின்னத்தையும், கொடியையும் மாற்றியமைக்கப் போவதில்லை என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications