எரித்துக் கொல்லப்பட்ட கண்டக்டருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: ஜெ. உத்தரவு
சென்னை: ஓடும் பேருந்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட தனியார் பேருந்து கண்டக்டரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியுள்ளதாவது:
20.5.2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, சில விஷமிகள் பேருந்தில் ஏறி நடத்துநர் செல்வா என்பவரிடம் தகராறு செய்ததின் பேரில் அவர்கள் தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
மேற்படி பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிறுத்தத்திற்கு வந்த போது பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட அந்த நபர்கள் பின் தொடர்ந்து வந்து பேருந்து நடத்துநர் செல்வாவிடம் மீண்டும் தகராறு செய்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.5.2014 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த நடத்துநர் செல்வாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க ஆணையிட்டுள்ளேன். இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications