நெல்லை, தூத்துக்குடியில் தொடர்ந்து விழும் கொலைகள்.. பீதியில் மக்கள்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் கொலை சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியிருப்பது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
பெரும்பாலான கொலைகள், பழிக்கு பழி, கள்ளகாதல், நடத்தை சந்தேகம் போன்ற காரணங்களால் நடக்கிறது. இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.

சேரன்மகாதேவியில் தங்கபாண்டி கொலை
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த தங்கபாண்டி என்பவர் முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.

தூத்துக்குடியில் அம்பிகாபதி கொலை
இது போல் தூத்துக்குடி கிருஷ்ணாபுரம் 2வது தெருவை சேர்ந்த அம்பிகாபதி என்பவர் பெண் கொலைக்கு பழிக்கு பழியாக வெட்டி கொல்லப்பட்டார். தேனி மாவட்டம் சின்னமானூரை சேர்ந்த அருண்பாண்டி என்பவர் எட்டயபுரம் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கடையநல்லூரில் மாணவர் கொலை
மேலும் மேல கடையநல்லூரை சேர்ந்த ஐடிஐ மாணவர் முருகன் கொலை செய்யப்பட்டார். எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் ரவுடி முகேஷ் குமார் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பீதியில் மக்கள்
இந்த சம்பவங்களால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். போலீசார் போதிய நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவம் அதிகரித்து வருவதாக அவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

உளவுத்துறை ஆய்வு தேவை
கடந்த காலங்களில் உளவு துறையினர், தனிபிரிவு போலீசார் என அனைவரும் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பர். ஆனால் தற்போது அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர் கொலையால் பொது மக்கள் வெளியே செல்லவே பயத்தில் இருந்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications