இரவெல்லாம் திபு திபு வெள்ளம்.. பகலில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை... அதுதான் மயிலாப்பூர்!
மயிலாப்பூரில் 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்றிரவு வெள்ளம் சூழ்ந்த நிலையில் இன்று பகலில் இயல்பு நிலை திரும்பியது.
Recommended Video

சென்னை: மயிலாப்பூரில் நேற்றிரவு பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் இன்று காலையில் இயல்பு நிலை திரும்பியது.
மயிலாப்பூரில் சிறந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் தாழ்வாக இருந்தாலும் வெள்ளநீர் ஒரு நாளைக்கு மேல் தேங்குவதில்லை.
வியாழக்கிழமையன்று பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்த நிலையில் சாலையெங்கும் குளமானது. இதனால் சாந்தோம் சாலையிலும், கச்சேரி சாலையிலும் வாகனங்கள் நத்தையாக ஊர்ந்தன.

வடிந்த வெள்ளநீர்
காலையில் வெள்ளம் வடிந்த காரணத்தால் இயல்பு நிலை திரும்பியது. கடற்கரை சாலையில் வழக்கம் போல வாகனங்கள் செல்கின்றன. ஒரே நாளில் வெள்ளம் வடிந்து செல்லும் அளவிற்கு சிறந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளநீர் மாயம்
புறநகர் பகுதி போல மயிலாப்பூரும் தீவாகிவிடுமோ என்று அஞ்சிய நிலையில் வெள்ள நீர் அத்தனையும் பக்கிங்காம் கால்வாய் வழியா வழிந்தோடி கடலில் கலந்து விட்டது.

பக்கிங்காம் கால்வாய்
சென்னையில் பெய்யும் பலத்த மழையையும், பெருகும் வெள்ளத்தையும் தாங்கும் சக்தி பக்கிங்காம் கால்வாய்க்கு மட்டுமே உள்ளது. பல பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருந்தாலும் 2015ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் கற்றுக்கொண்ட பாடத்தினால் பல இடங்களில் தூர்வாரப்பட்டு இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை தாங்கியது.

ஒரே நாளில் இயல்பு நிலை
புறநகர் பகுதிகளில் 10 செமீ மழைக்கே வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து வெளியேற வழியில்லாமல் மிதக்கிறது. சரியான கட்டமைப்பு வசதி இல்லாததே இதற்குக் காரணம். மயிலாப்பூர் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாகவே சிறப்பு வடிகால் வசதியுடன் கூட கட்டமைப்பு கொண்ட பகுதியாகும். எனவேதான் 30 செமீ மழை பெய்தும் ஒரே நாளில் வெள்ளம் வழிந்தோடியது.

ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்
சென்னையின் புறநகர் பகுதிகளிலும் ஆறுகளின் வழித்தடங்கள், கால்வாய்களின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். இதன் காரணமாகவே வெள்ளநீர் வழிந்தோட வழியின்றி தவிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே புறநகர்வாசிகள் தப்பிக்க முடியும். ஆள்பவர்களை மட்டுமே குற்றம் சொல்லி பயனில்லை. மக்களும் மாறவேண்டும். இரண்டு முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து இனியாவது பாடம் கற்க வேண்டும்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications