உச்சநீதிமன்றம் கண்டித்த பின்னரும் பதவி விலக பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் மறுப்பு
சென்னை: உச்சநீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்த பின்னரும் கூட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் பதவி விலக மறுத்து வருகிறார்.
6வது ஐபிஎல் போட்டிகளின் போது பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். இந்த முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ததது.
அந்த அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் பிக்ஸிங்கில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் முத்கல் கமிட்டி அறிக்கை மீது விசாரணை நடைபெற்றது.

அப்போது, ஐபிஎல் பிக்ஸிங் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமெனில் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது. சீனிவாசன் ஏன் பதவியில் ஒட்டியபடி இருக்கிறார்? அப்படி சீனிவாசன் பதவி விலகவில்லை எனில் அதற்கான உத்தரவும் பிறப்பிக்க நேரிடும் என்றும் கூறியது.
அத்துடன் வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் சீனிவாசனோ, என்னை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து யாரும் வெளியேற்றிவிட முடியாது.. என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் சிவ்லால் யாதவும், உச்சநீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருப்போம் என்று கூறியிருக்கிறார். அதாவது சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கட்டும் அப்போது பார்க்கலாம் என்கிற அடிப்படையில் சிவ்லால் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பலரும் சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை மீண்டும் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதால் உச்சநீதிமன்றம் சீனிவாசனுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்து உத்தரவு பிறப்பிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications