கார் வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: அமைச்சர் நாராயணசாமிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமியின் வீடு அருகில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டு காரில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவருடைய வீட்டிற்கு இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் ஒதியன்சாலை போலீசாரும், இரண்டாம் அடுக்கில் ஐ.ஆர்.பி., போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் வீட்டிற்கு அருகில், தனியாக ஷெட் அமைத்து, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சரின் பயண பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சி.ஆர்.பி.எப்., என அழைக்கப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மத்திய ரிசர்வ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் மார்க்ஸ் தலைமையில், 13 பேர் அடங்கிய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், புதுச்சேரி ஐ.ஆர்.பி., பிரிவு கமாண்டோ போலீஸ் படை வீரர் ஒருவரும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள், நேற்று முதல், மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு உள்ள எல்லையம்மன் வீதியை தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரிக்கு வரும்பாதும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அமைச்சர் நாராயணசாமிக்கு புல்லர் புரூப் காரும் வழங்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications