கார் வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: அமைச்சர் நாராயணசாமிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமியின் வீடு அருகில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டு காரில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவருடைய வீட்டிற்கு இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் ஒதியன்சாலை போலீசாரும், இரண்டாம் அடுக்கில் ஐ.ஆர்.பி., போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் வீட்டிற்கு அருகில், தனியாக ஷெட் அமைத்து, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சரின் பயண பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சி.ஆர்.பி.எப்., என அழைக்கப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மத்திய ரிசர்வ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் மார்க்ஸ் தலைமையில், 13 பேர் அடங்கிய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், புதுச்சேரி ஐ.ஆர்.பி., பிரிவு கமாண்டோ போலீஸ் படை வீரர் ஒருவரும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள், நேற்று முதல், மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு உள்ள எல்லையம்மன் வீதியை தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரிக்கு வரும்பாதும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அமைச்சர் நாராயணசாமிக்கு புல்லர் புரூப் காரும் வழங்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications