விதிப்படி அமர்நாத் மாற்றப்பட்டார்.. இதிலென்ன தவறு.. ஏன் போராடுகிறார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்
முறைப்படித்தான் அமர்நாத் கீழடியில் இருந்து மாற்றப்பட்டார் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதனை தமிழ் அமைப்புகள் அரசியலாக்கப் பார்க்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை; சிவகங்கை மாவட்டம் தமிழர்களின் வரலாற்றை வெளியுலகத்திற்கு கொண்டு வந்த கீழடி அகழாய்வு பகுதியை மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் பார்வையிட சென்றனர். அவர்களுக்கு அங்கு கடும் எதிர்ப்பை பொதுமக்களும் தமிழ் தேசம் அமைப்பினர் தெரிவித்தனர்.
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது
இந்த ஆய்வுப் பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தியது. மேலும், அதற்கு மேற்கொண்டு ஆகும் செலவிற்கான பணத்தையும் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதைவிட மோசமாக அந்த ஆய்வுன் தலைவர் அமர்நாத்தை இடமாற்றம் செய்தது.

கடும் எதிர்ப்பு
இந்நிலையில், இந்த இடத்தை பார்வையிட வந்த பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். திரும்பிப் போ என்று முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மாற்றுவது விதி
நாங்கள் அமர்நாத்தை மட்டும் மாற்றவில்லை. இந்தப் பணியில் இருந்து 26 பேரையும் மாற்றியுள்ளோம். 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் இருக்கும் அதிகாரி மாற்றுவது விதி. இது வழக்கமான ஒன்று. அந்த ஒரு ஆளுதான் நியாயமாக வேலைப் பார்ப்பார். மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்.

என்ன கிடைக்கும்?
அந்த இடத்திற்கு இன்னொருவரை போட்டிருக்கிறோம். அவரும் தமிழை புரிந்து கொள்பவர்தான். கீழடியில் கிடைக்கப் போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது. அகழ்வாய்வு முடிவதற்கு முன்பே மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

அரசியல் நோக்கு
இதில், ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கோடு இதனை எதிர்க்கிறார்கள். ஆனால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வு நடைபெற உள்ளது. இங்கு கிடைக்கிற பொருட்கள் சில சென்னையில் வைக்கின்றனர். சிலதை தமிழகத்தில் உள்ள வேறு இடத்தில் வைக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் தமிழகத்தில்தானே அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications