என்.எல்.சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: தமிழகத்தில் தொழில் அமைதியை பாதுகாக்கவும், தங்குதடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தவும் வசதியாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்தில், பிரதமர் உடனடியாக தலையிட்டு சுமூகத் தீர்வுகாண வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
என்.எல்.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த 20ம் தேதியிலிருந்து திருப்திகரமான ஊதிய மாற்று ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்தக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திற்கு மின்சாரம் வழங்குவதில் என்.எல்.சி. முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதும், என்.எல்.சி. நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் சுமார் 1,450 மெகா வாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைப்பதும் பிரதமருக்கு தெரியும்.
என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஊதிய உடன்பாடு ஏற்பட்டிருக்க வேண்டும் என தாம் அறிவதாகவும், ஆனால், 2014ம் ஆண்டு ஜுன் மாதம் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை ஊதிய உடன்பாடு ஏற்படவில்லை.
என்.எல்.சி. நிறுவனம், லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனம். எனவே, தமிழகத்தின் தொழில் அமைதியை பாதுகாக்கவும், தங்கு தடையற்ற மின் விநியோகத்தை பராமரிக்கவும் வசதியாக, என்.எல்.சி. தொழிலாளர்களின் குறைகளை உடனடியாக ஆய்வு செய்து, பிரச்னைக்கு விரைவில் சுமூகத் தீர்வுகாணுமாறு பிரதமர், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications