ஆக்கிரமிப்பு இடத்தில் தனக்கு கோவில் வேண்டும் என எந்த கடவுளும் கேட்பதில்லை.. ஹைகோர்ட் அதிரடி!
ஆக்கிரமிப்பு இடத்தில் தனக்கு கோவில் வேண்டும் என எந்த கடவுளும் கேட்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆக்கிரமிப்பு இடத்தில் தனக்கு கோவில் வேண்டும் என எந்த கடவுளும் கேட்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை ரிசர்வ் வங்கிக்கு எதிரே உள்ள அரசு இடத்தை ஆக்கிரமித்து கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலை அகற்ற அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் முடிவை எதிர்த்து அப்பு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்த கடவுளும் ஆக்கிரமிப்பு இடத்தில் தனக்கு கோவில் வேண்டும் என கேட்பதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். சாமி சிலைகளை வைத்து கோவில் கட்ட விரும்பினால் அங்கீகரிக்கப்பட்ட இடமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் தங்களின் சுயநலத்திற்காக சாலையோரம் கோவில் கட்டுவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை ரிசர்வ் வங்கி எதிரே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்ட நீதிபதிகள் அப்புவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications