யார் தடுத்தாலும் ஆர்எஸ்எஸ் மேடைகளில் பேசுவேன்... விசு கொந்தளிப்பு
யார் தடுத்தாலும் ஆர்எஸ்எஸ் மேடைகளில் பேசுவேன் என்று இயக்குநர் விசு ஆவேசமாக தெரிவித்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
நாகர்கோவில்: ஆர்எஸ்எஸ் மேடைகளில் யார் தடுத்தாலும் நான் பேசுவேன் என்று இயக்குநரும் நடிகருமான விசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீதாராம் சுவாமி என்பவர் நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு அதனை நாகர்கோவிலில் முடித்துக்கொண்டார். அதை விழாவாக நடத்திய ஆர் எஸ் எஸ் அமைப்பு கொண்டாடியது. அதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், திரைப்பட இயக்குநர் விசு, கவிஞர் பிறைசூடன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , " நாட்டைச் சுற்றி சாலை அமைத்து அதற்கு பாரதமாதா சாலை என்று பெயரிட வேண்டும் " என்று கூறினார்.
பின்னர் பேசிய திரைப்பட இயக்குநர் விசு கூறுகையில், " ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தும் இந்த விழாவில், நான் கலந்துகொள்ள கூடாது என்று சிலர் எதிர்ப்புக் காட்டினர். நான் கன்னியாகுமரிக்கு போகிறேன். அங்கு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் என்றதும், ஏன் சார் நீங்க போறீங்க...டிவி பத்திரிகை எல்லாம் பாக்கிறதில்லையா? என்று கேட்டனர்.
ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேசுவதை எல்லாம் கவனிப்பதில்லையா என்றும் கேட்டனர் என்னிடம். நான் அவர்களிடம் கூறினேன். எனக்கு 73 வயதாகிறது. இந்த வயதில் எனக்கு முடிவெடுக்க தெரியாதா? கண்டிப்பாக நான் ஆர் எஸ் எஸ் மேடைக்குப் போவேன். பேசுவேன்" என்று தெரிவித்தார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications