2 ஆயிரம் ரூபாயை திரும்ப பெறும் திட்டம் இல்லை - பொன். ராதாகிருஷ்ணன்.
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது நிறுத்தும் எண்ணமோ இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Recommended Video

டெல்லி : ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது நிறுத்தும் எண்ணமோ இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
நாட்டில் ஊழல், கள்ளநோட்டு, கறுப்புபணம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த 2016ம், ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தார்.
இதனையடுத்து புதிய ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகள் அறிமுகப்பட்டுத்தப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன

பணம் வாபஸ்
கடந்த 2016ம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறுவது குறித்து கேட்டகப்பட்ட கேள்விக்கு மத்தியஅரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

லோக்சபாவில் பதில்
மத்திய அரசு எதிர்காலத்தில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை தடை செய்யுமா அல்லது புழக்கத்தில் இருந்து நிறுத்திவிடுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு லோக்சபாவில் நிதித்துறை இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.

வாபஸ் பெறும் எண்ணம் இல்லை
கடந்த 2016ம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாட்டில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது நிறுத்தும் எண்ணமோ இல்லை. அதேசமயம், முக்கியமான 5 நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில்விட முடிவு செய்துள்ளோம்.

ரிசர்வ் வங்கி ரிலீஸ்
கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இது புழக்கத்தில் விடப்பட உள்ளது. எப்போது புழக்கத்தில் விடப்படும் என்ற கால்கெடு கூற முடியாது. இந்த பிளாஸ்டிக் கரன்சிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகங்களில் அச்சடிக்கப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications