புதன் கிழமையில் இருந்து சென்னையில் மழை இருக்காது... நார்வே வானிலை ஆய்வு மையம்!
புதன் கிழமையில் இருந்து சென்னையில் மழை இருக்காது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: புதன் கிழமையில் இருந்து சென்னையில் மழை இருக்காது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர்
சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் முடிச்சூர் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் இரவு முதலே மழை பெய்து வருகிறது. தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதன் கிழமை முதல் இருக்காது
இந்நிலையில் சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. புதன்கிழமையில் இருந்து தமிழகத்தில் மழை இருக்காது என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிற்பகலுக்குப் பிறகு
சென்னையில் இன்று பகல் 12 மணிவரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் பிற்பகலுக்குப் பிறகு சென்னையில் சாரல் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை எப்படி இருக்கும்?
நாளையும் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.

வானம் தெளிவாக காணப்படும்
புதன் கிழமையில் இருந்து சென்னையில் மழை இருக்காது என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. புதன் கிழமைக்குப் பிறகு ஒருவாரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications