தற்காப்பைவிட தன்மானம்தான் முக்கியம்.. யாரை பார்த்து கமல் இதைச் சொன்னார்?
சென்னை: தற்காப்பு முக்கியமில்லை, தன்மானம்தான் முக்கியம் என்று முரசொலி பவளவிழா மேடையில் வைத்து நடிகர் கமல்ஹாசன் பேசியது பெரும் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.
பவள விழாவில் நிறைவுரையாற்றினார் கமல். அப்போது, தான் கருணாநிதியின் நீண்ட கால ரசிகன் என்று அவர் குறிப்பிட்டார்.
விழாவிற்கு ரஜினி வருவாரா என கேட்டேன். ரஜினி வருவார், ஆனால் விழா மேடையின் கீழேதான் அமர்வதாக கூறியுள்ளார் என்று கூறினார்கள் என்று நினைவுகூர்ந்தார் கமல்.

தன்மானம் முக்கியம்
கமல் மேலும் பேசியதாவது: ரஜினி கீழேதான் அமர உள்ளதாக கூறியதும், நானும் கீழேயே அமர்ந்துகொள்கிறேன் என்றுதான் கூறினேன். மேடையில் அமர்ந்தால் எதையாவது பேசி சிக்கலில் மாட்ட வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருந்திருக்கும். ஆனால் பிறகு கண்ணாடி முன்னால் நின்று என்னை நானே பார்த்து கேட்டுக்கொண்டேன். "டேய் முட்டாள், தற்காப்பு முக்கியம் அல்ல. தன்மானம் தான் முக்கியம். முரசொலி மேடையில் அமரவில்லை எனில் முட்டாள் ஆகியிருவ" என சொல்லிக்கொண்டேன். இதன்பிறகு விழா மேடையில் அமர கிடைத்த மாபெரும் வாய்ப்பை நழுவ கூடாது என வந்தேன் என்றார் கமல்.

ரஜினி என்கிறார்கள் நெட்டிசன்கள்
கமல் இவ்வாறு நேரடியாக ரஜினியை குறிப்பிட்டு பேசியதால், இது ரஜினியை பார்த்து, கமல் செய்த விமர்சனம் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. விழா மேடையில் ஏறி ரஜினி பேசியிருக்க வேண்டும் என கமல் விரும்பியதைத்தான் இவ்வாறு தன்னை பார்த்தே பேசிக்கொண்டதாக உவமையோடு கமல் கூறியதாக நெட்டிசன்கள் கருதுகிறார்கள்.

அரசியல் பார்வை
மற்றொரு பக்கம், கமல் இவ்வாறு கூறியது தமிழக அரசிலுள்ளவர்களை நோக்கி என்ற அரசியல் பார்வையையும் சிலர் முன் வைக்கிறார்கள். டெல்லி கூறுவதன்படிதான் அதிமுக அரசிலுள்ளவர்கள் செயல்படுவதாக விமர்சனம் உள்ளது. இரு அணிகள் இணையும் அவசரத்தின் பின்னணியிலும் டெல்லி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கமல் அரசை காத்துக்கொள்ள விரும்பும் தற்காப்பு முக்கியமில்லை என அரசிலுள்ளவர்களைதான் குறிப்பிட்டு மறைமுகமாக விமர்சனம் செய்ததாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மோதல் போக்கு
தமிழக அமைச்சர்களுக்கும் கமலுக்கும் நடுவே அவ்வப்போது பேட்டி மோதல்கள் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக கமல் கூறியதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு குரல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications