கம்பம் அருகே டீ கடைக்குள் கேரள பேருந்து புகுந்து விபத்து: ஒருவர் பலி - 18 பேர் படுகாயம்
கம்பம் டீ கடைக்குள் கேரளா அரசு பேருந்து புகுந்த விபத்தில் பெண் பலியானார். 18 பேர் காயமடைந்தனர்.
தேனி: கம்பம் பழைய பேருந்து நிலையம் அருகே கேரள பேருந்து டீ கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற கேரள அரசுப் பேருந்து பழைய பேருந்து நிலைய சிக்னல் அருகே வந்த போது டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து நிலை தடுமாறி சிக்னல் அருகே இருந்த திருப்பதி டீ கடைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் கேஎம் பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் ,50 மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அனைவரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கவலைக்கிடமாக உள்ள 8 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.விபத்து தொடர்பாக கம்பம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications