திருத்தணி முருகனை தரிசிக்க மேலும் ஒரு மலைப்பாதை... சட்டசபையில் அமைச்சர் தகவல்
சென்னை: திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல மேலும் ஒரு புதிய மலைப்பாதை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரம் தொடங்கிய உடன் உறுப்பினர் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர்கள் சிலர் பதிலளித்தனர்.

சரத்குமார் கேள்வி
தென்காசி எம்எல்ஏ சரத்குமார், திருநெல்வேலி மின் பகிர்மான மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தென்காசியில் புதிய மின் பகிர்மான வட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
மடத்துக்குளம் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஊரகத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பட்டுக்கோட்டை புறவழிச்சாலை இரண்டாம் கட்ட பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. போரூர் - மதுரவாயில் மேம்பாலப் பணிகள் விரைவில் துவங்கி நிறைவடையும் என்று தெரிவித்தார்.
எஸ்.பி.வேலுமணி
மதுரையில் மேம்பாலம் அமைக்கப்படுமா, சாலைகள் சீரமைக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மதுரையில் சாலைகளை பராமரிக்க 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 300 கோடி ரூபாய் அதிகம் என்று தெரிவித்தார்.
திருத்தணியில் மலைப்பாதை
திருத்தணி முருகனை தரிசிக்க மேலும் ஒரு மலைப்பாதை அமைக்கப்படுமா என்று தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ அருண் சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், திருத்தணி மலைப் பாதையில் முருகன் கோயிலுக்குச் செல்ல மேலும் ஒரு மலைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications