'ரூபாய் நோட்டு செல்லாது' அறிவிப்பால் கறுப்பு பணம் ஒழிந்துவிடாது: ப. சிதம்பரம்
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கறுப்பு பணம் ஒழிந்துவிடாது; ஊழலுக்கும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கும் தொடர்பு இல்லை என முன்னாள் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டு செல்லாது மற்றும் புதிய ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்துவதால் கறுப்பு பணம் ஒழிந்துவிடாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ப. சிதம்பரம் அளித்த பேட்டி:
மோடியின் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்னர் நாடு முழுவதும் சில்லறை ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கி வரிசையிலும், ஏடிஎம் வாசல்களிலும் மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

கறுப்பு பணம் ஒழியாது
இது மிகப்பெரிய இயற்கை பேரிடர். கறுப்பு பண ஒழிப்புக்கும் பண மதிப்பு நீக்கத்திற்கும் தொடர்பு இல்லை. பழைய நோட்டை செல்லாது என்று அறிவிப்பதால் கறுப்பு பணம் ஒழிந்து விடாது. இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது போல உள்ளது.
பிடிபடும் புது நோட்டுகள்
புதிய நோட்டுக்களை அறிமுகம் செய்வதாலும் கறுப்பு பணம் ஒழிந்து விடாது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் கோவை, சென்னை, விமான நிலையங்கள், தலைமை செயலாளர் வீட்டில் புதிய நோட்டுக்கள் பிடிபடுகின்றன.
ரொக்கமில்லா பணபரிவர்த்தனை
ஊழலுக்கும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கும் சம்பந்தமே கிடையாது. இது விளையாட்டாக சொல்லப்படும் கதை, இது ஆழமே இல்லாத கருத்துக்கள்
பொறுமையா?
பணம் வேண்டுமே என்பதற்காக பொறுமையாக இருப்பதாலேயே மக்கள் மனதில் பொருமல் இல்லாமல் இல்லை. டிசம்பர் 30 வரைக்கும் மக்கள் பொறுமையாக இருக்கிறார்கள்.
ஆதரவு?
மத்திய அரசின் சமூக வலைதளங்களில் உள்ளனர். அவர்கள்தான் ஆன்லைன் சர்வேயில் பங்கு கொள்கின்றனர். எனவே மோடியின் அறிவிப்புக்கு ஆதரவு இருப்பது போல தெரிகிறது.
கடும் பாதிப்பு
பணமதிப்பு நீக்கம் விலை வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 கோடி மக்கள் தினசரி சம்பளத்தை நம்பியே இருக்கின்றனர். 15 கோடி மக்கள் தினசரி கூலியை நம்பியே உள்ளனர். 50 நாட்களாக வேலையின்றி வருமானம் இன்றி தவிக்கின்றனர்.
இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications