ப.சியின் பெயரை கெடுக்கவே ஐடி ரெய்டு.. இதற்கெல்லாம் காங்கிரஸ் அஞ்சாது… பீட்டர் அல்போன்ஸ் ஆவேசம்
ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்கவே வருமானவரிச் சோதனை நடத்தப்படுகிறது என்று பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இருவரது வீடுகளிலும் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வீடுகள் மட்டுமின்றி, சென்னை, காரைக்குடி, டெல்லி, நொய்டா உள்பட 14 இடங்களில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் மட்டும் 8 இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ப.சிதம்பரத்தின் புகழையும் நற்பெயரையும் கெடுக்கவே இந்த வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.

கண்டனம்
இதனை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் அல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அதனால் காங்கிரஸ் கட்சியின் மதிப்பு மிக்க தலைவர்களின் நற்பெயரை கெடுக்க இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

அந்நிய முதலீடு
ப. சிதம்பரம் 10 ஆண்டுகள் நிதி அமைச்சராக இருந்தவர். ஆசியாவின் மிகச் சிறந்த நிதி அமைச்சர் என்ற பெயர் பெற்றவர். உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொருளாதார நிபுணர். அவருடைய ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கலாம். ஒரு நிதி அமைச்சரின் பணியே வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்வதும், முறையான வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பதும்தான். அவருடைய பணியை அவர் செய்திருக்கிறார்.

ஆதாயம்
அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற சோதனைகள் நடத்துகின்ற போது நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக் குறியாகும் நிலை ஏற்படும். நியாயமான வருமான வரிச் சோதனை நடைபெறுவதிலோ, ஊழலுக்கு எதிரான சோதனை நடத்தப்படுவதிலோ காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காது. ஆனால், பாஜக ஆதாயம் தேட முயலும் போது காங்கிரஸ் அதனை வன்மையான கண்டிக்கிறது.

மிரட்டல்
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, ஜனாதிபதி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கிறேன் என்று உறுதி அளித்த பிறகுதான் பிரதமர் அவரை சந்தித்தார். அதற்கு முன்னர் எத்தனை முறை அவர் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது? ஆகவே, இதுபோன்ற ரெய்டுகள் நமக்கு பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இதே போன்று காங்கிரஸ் கட்சியை மிரட்ட நினைத்தால் அதற்கு அச்சப்பட மாட்டோம்.

சிபிஐ நடவடிக்கை
சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதனை உச்சநீதிமன்றமே பல முறை சொல்லி இருக்கிறது. ஆகவே, மத்திய அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications