கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டாரா... விஜயகாந்த், பிரேமலதா மீது சி.எம் செல்லில் பெற்றோர் மனு
பெரம்பலூர்: விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தங்களது மகன் மர்மமான முறையில் உயிரிழந்தாக சீராளன் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவைச் சேர்ந்தவர்கள் சீராளன் - நாகம்மாள் தம்பதி. சீராளன் சி.எம் செல்லில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், மாமண்டூரில் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியில் தங்களது மகன் சிவசுப்பிரமணி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த ஏப்ரல் 30-ந் தேதி மாலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் வந்து பார்த்தபோது எனது மகன் இறந்துவிட்டான். எனது மகனின் நண்பர்களிடம் நான் விசாரித்தபோது, கல்லூரியிலேயே எனது மகனை அடித்து கொலை செய்து விட்டனர் என்று கூறினர்.
இது தொடர்பாக படாளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுகேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமகவைச் சேர்ந்த கேகே ஜெயராமன், விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் கோதண்டராமன் ஆகியோர் என்னை சமரசம் செய்ய முயன்றனர். தற்போது எங்களுக்கு சிலர் மிரடல் விடுத்து வருகின்றனர். சிலர் பஞ்சாயத்து பேசுகின்றனர். எனவே பஞ்சாயத்து பேசுபவர்களையும், கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவில் 6.6.2016 அன்று மனு அளித்திருந்தேன்.
மேலும், போயஸ் கார்டனில் மனு அளித்தேன். பெரம்பலூர் எம்எல்ஏவிடம் மனு அளித்தேன். எந்த பயனும் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications