கால்வாய் பாலம் உடைப்பு - அதிகாரிகள் அலட்சியத்தால் பொது மக்கள் அவதி
நெல்லை அருகே கால்வாய் பாலம் உடைந்துள்ளதால் பொதுமக்கள் கால்வாயை கடக்க முடியாமல் அவதி பட்டு வருகின்றனர்.
நெல்லை: நெல்லை அருகே கால்வாய் பாலம் உடைந்துள்ளதால் பொதுமக்கள் கால்வாயை கடக்க முடியாமல் அவதி பட்டு வருகின்றனர். இதனால் கழுத்தளவு தண்ணீரில் மக்கள் நீந்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள மேலகூனியூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள், களத்து மேடு, மாயனம் போன்றவை அங்குள்ள கன்னடியன் கால்வாய் மறுபக்கம் உள்ளது.

பொதுமக்கள் கால்வாயை கடப்பதற்கு எதுவாக பொதுப்பணித்துறை மூலம் சிறு பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலத்தின் வழியாக மட்டுமே விவசாயிகள் நிலங்களுக்கு செல்லவும், இறந்தவர்களை இடுகாட்டுக்கு எடுத்து செல்லவும் முடிந்தது.
இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலம் இடிந்து விட்டது. இதனால் கழுத்தளவு தண்ணீரில் மக்கள் நீத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் தங்கள்நிலத்துக்கு செல்ல பனை மரத்தடியை கொண்டு தற்காலிக பாலம் அமைத்து கால்வாயை கடந்து வந்தனர். தற்போது அந்த பனைமரமும் உடைந்துவிட்டதால் கால்வாய்க்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதுகுறித்து கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications