ரவுடி ஸ்ரீதர் தற்கொலைக்கு பயன்படுத்திய விஷம் காஞ்சிபுரத்தில் இருந்து சென்றதா?
கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதருக்கு காஞ்சிபுரத்தில் இருந்து விஷம் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்: கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதருக்கு காஞ்சிபுரத்தில் இருந்து விஷம் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை, ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதர். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் போலீசார் தரப்பில் இருந்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஸ்ரீதரின் உடலை பெற அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கம்போடியா சென்றுள்ளனர்.

திடுக்கிடும் தகவல்கள்
ஆனால் ஸ்ரீதர் மரணம் குறித்து நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை மாரடைப்பால் உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது.

காஞ்சியில் இருந்து கம்போடியாவுக்கு
இந்நிலையில் ஸ்ரீதர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் அவருக்கு காஞ்சிபுரத்தில் இருந்து விஷம் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் விமானம் மூலம் கம்போடியாவுக்கு விஷத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.

மகனிடம் பேசிய ஸ்ரீதர்
போலீசார் கொடுத்த நெருக்கடியே ஸ்ரீதரை தற்கொலைக்கு தூண்டியதாகவும், இது திட்டமிடப்பட்ட கொலைதான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஸ்ரீதர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது மகன் சந்தோஷை தொடர்பு கொண்டு யார் யார் எவ்வளவு பணம் தரவேண்டும் என்ற தகவலை கூறியுள்ளார்.

வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த ஸ்ரீதர்
மேலும் தான் இறந்த பிறகு தனது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வது குறித்தும் தனது வழக்கறிஞர்களுடன் ஸ்ரீதர் ஆலோசித்துள்ளார். ஆனால் ஸ்ரீதர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தாத காவல்துறை அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

லஞ்சம் கொடுத்தது அதிகம்
ஏற்கனவே தான் சம்பாதித்ததைவிட போலீஸ்க்கு லஞ்சம் கொடுத்தது தான் அதிகம் என ஸ்ரீதர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் விவகாரத்தில் போலீஸ் அலட்சியம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

டிஎன்ஏ சோதனைக்கு தயார்
ஸ்ரீதர் மரண விவகாரத்தில் நாள்தோறும் வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக உள்ளது. இதனிடையே கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டது ஸ்ரீதர் தான் என்பதை காவல்துறை உறுதி செய்ய தான் டிஎன்ஏ சோதனைக்கு தயார் என ஸ்ரீதரின் மகன் சந்தோஷ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications