சவூதியில் விற்கப்பட்ட சென்னைப் பெண்... அதிரடியாக மீட்ட போலீஸ்
சவூதி நாட்டில் வீட்டுவேலை வாங்கித் தருவதாகக் கூறி விற்கப்பட்ட சென்னைப் பெண்ணை போலீசார் அதிரடியாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை: சவூதியில் வீட்டுவேலை வாங்கித் தருவதாகக் கூறி விற்கப்பட்ட சென்னைப் பெண்ணை, புகாரின் பேரில் சென்னைப் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் சந்தான காளீஸ்வரி. கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். அவரது குடும்ப வறுமையைப் பயன்படுத்தி வெளிநாட்டில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏஜென்ட் ஒருவர் அணுகியுள்ளார்.

இதனடிப்படையில், திருவல்லிக்கேணியில் உள்ள அட்லான்டிக் ஏஜென்ஸி உரிமையாளர் தனபால் மூலம் சவூதி அரேபியாவுக்கு கடந்த மாதம் அப்பெண்ணை அனுப்பியுள்ளார்.
ரூ. 1 லட்சத்துக்கு விற்பனை
சவூதி அரேபியாவில் 25 பேர் கொண்ட ஒரு வீட்டில், 24 மணி நேரமும் உணவு, உறக்கமின்றி பணியாற்றிய போதுதான், ஒரு லட்சம் ரூபாய்க்கு தாம் விற்கப்பட்டது அப்பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது.
பாஸ்போர்ட் பறிப்பு
செல்போன், பாஸ்போர்ட்டை அந்த குடும்பத்தினர் பறித்து வைத்துக் கொண்டனர். அதனால் அங்கிருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் சந்தான காளீஸ்வரி தவித்துள்ளார்.
சென்னையில் போலீசில் புகார்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சவூதி போலீசிடம் விசாரணை
மேலும், அட்லான்டிக் ஏஜென்ஸி மூலம் சவூதியில் உள்ள குடும்பத்தினரிடம் திருவல்லிக்கேணி போலீசார் பேசியுள்ளனர். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கையைத் தவிர்க்க காளீஸ்வரியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு கூறி எச்சரித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சந்தான காளீஸ்வரி
பின், இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியோடு, சந்தான காளீஸ்வரி அங்கிருந்து மீட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர், உறவினர்களிடம் சந்தான காளீஸ்வரி ஒப்படைக்கப்பட்டார்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications