ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை கைது செய்யக்கூடாது: ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய அப்பாவி மாணவர்களை எதுவும் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குற்ற பின்னணி இல்லாதவர்களைக் போலீஸார் கைது செய்யக்கூடாது என்று ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த பி.உதயகுமார், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி என்.கிருபாகரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட விடியோ ஆதாரங்களை வைத்து போலீஸார் தொடர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்த போலீஸார், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தாமல் காவல் நிலையத்தில் வைத்து சட்டவிரோதமாக தாக்கி வருகின்றனர்.
அலங்காநல்லூர் போராட்டத்தில் வெளியூர்களைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். அவர்களது செல்போன், இருசக்கர வாகனம் உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை திருப்பி அளிக்க மறுத்து மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர்களைப் போலீஸார் இனிமேல் கைது செய்யக்கூடாது. வன்முறையில் ஈடுப்பட்டார்கள் மீது ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை நிகழ்ந்துள்ளது என்றார். மேலும் உதயகுமாரை ஜனவரி 31ம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications