தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி என்று ஒன்று இருக்கிறதா?- அரசியல் தலைவர்கள் கேள்வி
ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவதற்கு தமிழக அரசியல் கட்சித்ததலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நடைபெறும் போது கோவையில் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்துவதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும் போது மத்திய அரசினால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் திடீரென அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் ஆளுநர்கள் எடுத்துரைப்பார்கள். ஆனால், அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது கிடையாது. நேரடியாக உத்தரவும் பிறப்பிப்பது இல்லை.

ஆனால், சமீபத்தில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் இன்று கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை ஆணையர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநரின் இந்த திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
ஆளுநர் ஆய்வு பற்றி கருத்து கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது, தமிழ்நாட்டில் ஆளும்கட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்டார்.
மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படக்கூடிய ஆளுநர் எப்படி அரசு அதிகாரிகளுடன் ஆலோசிக்க முடியும் என்று கேட்டுள்ளார் முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா. எடப்பாடி பழனிச்சாமி எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவரது ஆட்சி பறிபோய் விடும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கிறார் பழ. கருப்பையா.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications