6 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி: குமரிக்கு இது வரமா அல்லது சாபமா- பொன்.ராதா
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ள நிலையில், இது குமரி மாவட்டத்திற்கு வரமா அல்லது சாபமா..? என்று பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்து உள்ளார். மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் நாகர்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, பேசிய அவர், தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதாக கூறினார்.
சரித்திரத்தில் இல்லாத அளவில் வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது. வரும் காலம் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி சீரும் சிறப்புமாக ஆட்சி அமையும் என நம்புவதாக தெரிவித்த அவர், இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து தமிழக முன்னேற்றத்திற்கு கைகோர்த்து நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வைகோ தலைமையில் கூட்டணி அமைந்த போதே ஆளும் கட்சி அல்லது ஆண்ட கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் வல்லுனர்களின் கருத்தாக இருந்தது. தனது வலிமை தன்னோடு இருப்பவர்களின் வலிமையை தெரிந்து கொண்டுதான் தேர்தலை சந்திக்க வேண்டும் மக்கள் நல கூட்டணியை ஒதுக்கியதன் மூலம் தமிழக மக்கள் நல்ல முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
கடந்த கால அனுபவங்கள் அடிப்படையில் இடைதேர்தல் ஆளும் கட்சிக்குதான் சாதகமாக இருக்கும், தி.மு.க.வின் தோல்வி இந்த தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய தோல்வி, தனியாக நிற்க முடியாமல் தி.மு.க.வோடு குதிரை சவாரி செய்து காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த தேர்தலில் கடுகளவு வேலை செய்யாதவர்கள் மற்றும் பிரசாரம்கூட செய்யாதவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது குமரி மாவட்டத்திற்கு வரமா அல்லது சாபமா என்பது தெரிய வில்லை என்று கூறினார்.
தி.மு.க. கூட்டணிக்கு ஆறு இடங்களை கொடுத்தன் மூலம் குமரி மாவட்டம் தொலைந்துவிட கூடாது. பா.ஜ.க.விற்கு தமிழக மக்கள் அதிக வாக்குகள் கொடுக்கவில்லை என்பதால் மத்திய அரசின் திட்டங்கள் தடைபடாது, அதற்கு பிரதமர் மோடி அனுமதிக்கவும் மாட்டார் என்று தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு பரிபூரணமாக கிடைக்க புதிய அ.தி.மு.க. அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குமரி மக்கள் கவலை
பொன். ராதாகிருஷ்ணனின் கவலை ஒருபுறம் இருக்க, அரசின் கோபம் நம் மாவட்டத்தின் மீது திரும்புமா என்ற கவலை குமரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் அதிமுகவிற்கு படுதோல்வி கிடைத்துள்ளது. கன்னியாகுமரியில் மட்டுமே இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரத்தில் 3வது இடமும், விளவங்கோடு, கிள்ளியூரில் நான்காவது இடத்திற்கும் அதிமுக வேட்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications