எம்.எல்.ஏ.,க்களை அடைத்தது வைத்திருப்பது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம்: பொன்.ராதாகிருஷ்ணன்
அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கும் ஒரு கட்சியின் ஆட்சியே தொடர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை: சட்டமன்ற உறுப்பினர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருப்பது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம் என மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நீடிப்பாரா அல்லது எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக பதவி ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், தற்போது திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது. ஊழல் இல்லாத கட்சிகளே இனிமேல் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும். அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கும் ஒரு கட்சியின் ஆட்சியே தொடர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
ஆனால் தமிழகத்தில் தற்போது நடைபெறும் அதிகாரப் போட்டியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுமையாக செயல்பட்டார். இதை விட வேறு யாரும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது.
அ.தி.மு.க.,வில் முதல்வராக யார் வருவார் என தெரியாது. யார் வந்தாலும் தமிழகத்தின் தலையெழுத்து அது தான். சட்டங்களை இயற்றக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் சுதந்திரமின்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம். இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications