பசங்களா ஒரு குட் நியூஸ்... சென்னை பள்ளிகளில் முன் அரையாண்டு தேர்வுகள் ரத்தாம்
மழை எதிரொலியால் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட முன் அரையாண்டு தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மழையால் பாடங்களை முடிக்க முடியாததால் உயர்நிலை வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த 30-ஆம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை தீவிரமடைந்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தண்ணீர் வெளியேற்றம்
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் பள்ளி துவங்கும்போது வளாகத்துக்குள் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டுவிட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்று கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மழை படிப்படியாக குறையும்
இந்நிலையில் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தண்ணீர் வடியாத பள்ளிகள் தவிர்த்து சென்னையில் ஏனைய பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாணவர்களுக்கு தேர்வு
இந்நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு முன் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளது. அதற்கான அட்டவணையும் முன்கூட்டியே வழங்கப்பட்டுவிட்டது.

தேர்வு இல்லை
மழையால் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பாடங்களை முடிக்க முடியாததாலும் சென்னை மாவட்டத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
ஜூலையில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications