ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு... சசிகலாவின் முடிவே இறுதி என்கிறார் கருணாஸ்
டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் கருணாஸ் இன்று டிடிவி தினகரனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறியுள்ளார் கருணாஸ். குடியரசுத்தலைவர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளார் கருணாஸ்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓபிஎஸ், சசிகலா அணியாக பிரிந்த அதிமுக இப்போது 3ஆக பிளவு பட்டுள்ளது. அதிமுக அம்மா அணியில் டிடிவி தினகரன் அணி, ஈபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் பிளவு பட்டுள்ளனர்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிமுக ஆதரவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களும் தினகரன் ஆதரவாளர்களாகவே மாறி வருகின்றனர். சட்டசபையில் இருந்து வெளிநடப்பும் செய்து வருகின்றனர்.

குடியரசுத்தலைவர் தேர்தல்
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் வெளிப்படையாக அறிவித்து விட்டனர். ஆனால் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு என்று இன்னமும் கூறவில்லை. 3 எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும் மாட்டுக்கறி தடை விவகாரத்தில் பாஜகவிற்கு எதிராக உள்ளனர்.

கருணாஸ் சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார். மாட்டுக்கறி தடை விவகாரத்தில் எங்களின் கோரிக்கையை முதல்வர் ஏற்க மறுத்து விட்டார் என்றும் கருணாஸ் கூறினார்.

யாருக்கு ஆதரவு
குடியரசுத்தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறிய கருணாஸ், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும், அவரது முடிவே இறுதியானது என்றும் கூறினார்.

பாஜகவிற்கு ஆதரவு
மாட்டுக்கறி தடை விவகாரகத்தில் பாஜகவிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நடிகர் கருணாஸ், அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் முடிவுபடி பாஜக வேட்பாளரை ஆதரிப்பாரா அல்லது குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications