சென்னைப் புத்ககப் பிரியர்களே.. 9ம் தேதி தொடங்குகிறது புத்தக கண்காட்சி!
சென்னை: சென்னையில் வருடாவருடம் நடக்கும் புத்தக கண்காட்சி இந்த ஆண்டும் ஜனவரி 9 ஆம் தேதியன்று தொடங்க இருக்கின்றது.
இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், "தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் 38 ஆவது ஆண்டு புத்தக கண்காட்சி வரும் 9 ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மங்கள்யான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். 2 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 700 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் நூல்கள் இடம் பெறுகின்றன. அனைத்து விதமான புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கண்காட்சி நடக்கும் நாட்களில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், அறிஞர்கள், இதழாளர்கள், பிற படைப்பாளிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள், ஓவியப்போட்டிகள், சிறுகதைப்போட்டிகள், அனைத்துப் பிரிவினருக்குமான விவாத மேடை, குறும்படங்கள், கலை நிகழ்ச்சிகள், விருது வழங்குதல், புத்தக வெளியீடு, நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்- வாசகர் சந்திப்பு, உரைநடை கவிதை அரங்கம் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
வரும் 12, 13 தேதிகளிலும், 19 முதல் 21 ஆம் தேதி வரை பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி விடுமுறை நாள்களில் அதாவது வரும் 10, 11 தேதிகளிலும், 14 முதல் 18 தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். நுழைவுக்கட்டணம் ரூபாய் 10.
12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்குக் கட்டணம் கிடையாது. பார்வையாளர்களுக்கு சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சிறந்த பதிப்பாளர்கள், விற்பனையாளர், சிறந்த குழந்தை எழுத்தாளர், சிறந்த ஆங்கில எழுத்தாளர், சிறந்த சிறுவர் அறிவியல் நூல், சிறந்த தமிழ் அறிஞர், சிறந்த நூலகர் விருதுகளும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications