தடையை மீறி அமைச்சர் விஜயபாஸ்கர் ஊரில் நடந்த ஜல்லிக்கட்டு!!
புதுக்கோட்டை: ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பு... கைது எச்சரிக்கை என மதுரை மாவட்ட வாடி வாசல்களில் பரபரபப்புத் தீ பற்றிக்கொண்டிருக்க... உச்சநீதிமன்ற தடையை மீறி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் ஜல்லிக்கட்டை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விசயத்தை வெளியே விடாமல் கமுக்கமாக அமுக்கிவிட்டாராம் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூர் அருகே உள்ளது ராபூசல் கிராமம்தான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊர் ஆகும். இங்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான மைதானம் எப்போதுமே தயாராக இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மதுரை, திருச்சி, சிவகங்கை மாவட்டத்தில் போராட்டங்கள் வெடித்தன.

இந்தநிலையில் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்த ஒரு அறிவிப்பினை கடந்த 7ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு. ஆனால் பீட்டாவின் சதியால் மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இதனால் மீண்டும் தென் மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், இழுப்பூர் பகுதி முழுவதும் கடந்த ஒரு மாதமாகவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒத்திகை நடத்தியிருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு அதை கண்காணிக்கச் சென்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை மாடு முட்டியதில் அவர் காயம்பட, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியியதாகவும் தெரிகிறது. இது அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதி என்பதால் போலீசார் இந்த தகவலை வெளியில் விடவில்லையாம்.
இந்நிலையில், பொங்கல் தினமான நேற்று காலை 10 ஜல்லிக்கட்டு மாடுகளை, அமைச்சரின் சொந்த ஊரான ராபூசலில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கொண்டு சென்று, ஜல்லிக்கட்டை நடத்தியிருக்கிறார்கள். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவரவே உடனடியாக அவர்கள் அங்கு சென்று, ஜல்லிக்கட்டு நடத்துவதை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு எதுவும் நடத்தவில்லை மாடுகளை வைத்து சாமி கும்பிடத்தான் சென்றார்கள் என போலீசாரை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்ல வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications