மழை நிவாரணத் தொகையை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வந்தது. அந்த குழு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், சி.டி.ஓ. காலனி, சசிவரதன் நகர், தர்காஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

இதனிடையே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மக்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உரிய முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வெள்ள நிவாரணத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் அரசியல் பார்வைக்கு வித்திடுகிறது. வெள்ளத்தில் பாதிக்கப்படாத மக்களுக்கும் அரசியல் நோக்கத்துடன் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
இதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நிதியுதவியை செலுத்த வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையிலான பாஜக குழு தமிழகத்தில் நாளையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications