உச்சநீதிமன்றத்தில் நாளை முன் ஜாமீன் மனு விசாரணை.. சரியாக இன்று ராஜேந்திர பாலாஜியை கைது செய்த போலீஸ்!
ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளநிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர்: காவல்துறையின் கைதில் இருந்து தப்பிக்க அங்கே இங்கே என ஓடி ஒளிந்து டிமிக்கி காட்டிய ராஜேந்திரபாலாஜி ஹாசனில் கைது செய்யப்பட்டுள்ளார். 20 நாட்கள் அவர் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முன்ஜாமீன் மனு ரத்தானதில் இருந்து ஹாசனில் காவல்துறையினரிடம் ராஜேந்திரபாலாஜி சிக்கியது வரை என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, 3 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார்கள் வந்தன. இது குறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி தரப்பில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யுமாறு தனது வழக்கறிஞர்களிடம் சொல்லிவிட்டு விருதுநகரில் இருந்து புறப்பட்டார்.

ராஜேந்திரபாலாஜி தலைமறைவு
காவல்துறையினரின் கைதில் இருந்து தப்பிக்க உடனடியாக அவர் தலைமறைவானார். ராஜேந்திரபாலாஜியை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. முதலில் அவர் பெங்களூருக்கு சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் ராஜேந்திரபாலாஜி வெவ்வேறு கார்களின் மூலம் விருதுநகர், தென்காசி, செங்கோட்டை, புளியரை வழியாக கேரளாவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளிவந்தது. கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் முகாமிட்டு தேடி வந்தனர்.

உதவியாளர்கள் தலைமறைவு
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணா மற்றும் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை திருத்தங்கல் போலீசார் அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணைக்காக அழைத்து சென்றனர். முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் மற்றும் வக்கீல் முத்து பாண்டி ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

ஜெயக்குமார் பேட்டி
ராஜேந்திரபாலாஜி டெல்லி சென்று மறைந்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, விமான நிலையங்கள் மூலம் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க ராஜேந்திர பாலாஜியை கண்டால் கைது செய்ய வழிவகை செய்யும் லுக் அவுட் நோட்டீஸ் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. ராஜேந்திரபாலாஜி இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

காரில் சுற்றிய ராஜேந்திரபாலாஜி
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் மற்றும் ஓட்டுநர் ஆறுமுகம் இருவரும் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியுடன் இருந்தது போலீசார் கண்காணிப்பில் தெரியவந்தது. கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, ராஜேந்திர பாலாஜி தருமபுரி வந்தது உண்மைதான். ஆட்சியர் அலுவலகம் எதிரில் அரை மணி நேரம் காரில் இருந்தபடி பேசிவிட்டுப் புறப்பட்டு விட்டார் என பொன்னுவேல் வாக்குமூலம் அளித்தார்.

வெவ்வேறு சிம்கார்டுகள்
அடிக்கடி தங்கியிருக்கும் இடத்தை மாற்றி தங்களுக்கு டிமிக்கி கொடுத்து வந்த ராஜேந்திரபாலாஜியைப் பற்றி துப்பு கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. 600க்கும் மேற்பட்ட போன் அழைப்புகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனாலும், அவரை நெருங்க முடியவில்லை. ராஜேந்திர பாலாஜி வெவ்வேறு சிம்கார்டுகளை பயன்படுத்தி, வழக்கறிஞரை தொடர்பு கொள்வதாகவும், போலீசார் நெருங்குவது அவருக்கு முன்கூட்டியே தெரிந்து அவர் காரில் மாறி மாறி பயணம் செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கானது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. அவருக்கு முன் ஜாமீன் கிடைக்குமா கைது நடவடிக்கையில் இருந்து தப்பி விடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்
20 நாட்களுக்கும் மேலாக ஓடி ஒளிந்து வந்த ராஜேந்திரபாலாஜி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட போது காவி வேட்டி, கறுப்பு மஞ்சள் டி-ஷர்ட் உடை அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் உதவியோடு ராஜேந்திர பாலாஜி இடம் மாறிக்கொண்டிருந்தார் என்றும் அவர் இன்று ஹாசன் செக் போஸ்ட்டை கடந்த போது சிசிடிவியில் பதிவான காட்சிகளைக்கொண்டு பின்தொடர்ந்து சென்று கைது செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications