ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு விலை பேசிய எடப்பாடி மீது கிரிமினல் வழக்கு பதிய ஸ்டாலின் வலியுறுத்தல்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முதல்வர் பழனிச்சாமி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆர்.கே.நகரில் நடைபெற இருந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் ஊழல் செய்த பணத்தை வாரி இறைத்தன.

முதல்வரே தலைமை தாங்கி பணப்பட்டுவாடா
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் குழுக்களுக்கு முதல்வர் பழனிச்சாமி தலைமையேற்று நடத்தினார். இது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்தது.

ஆர்.டி.ஐ. தகவல்
இதுகுறித்து வழக்கறிஞர் வைரக்கண்ணன் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டார். ஏப்ரல் 18ம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதுகுறித்த தகவலை தேர்தல் ஆணையம் ஆர்.டி.ஐ.யில் தெரிவித்துள்ளது.

வழக்கு பதியாதது ஏன்?
தேர்தல் ஆணையம் உத்தவிட்டு 3 மாதங்கள் ஆகியும் முதல்வர் பழனிச்சாமி மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. முதல்வர், அமைச்சர்க்ள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யத் தயங்குவது ஏன்?

திமுக வழக்கு தொடரும்
தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது கண்டனத்துக்குரியது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் முதல்வர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்றத் தவறினால், உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடரப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications