இஸ்லாமிய பெண்கள் “டார்கெட்”.. 3,042 சவரன் தங்கமா? மயிலாடுதுறையில் ரூ.12.5 கோடியில் “மெகா” மோசடி
மயிலாடுதுறை: இஸ்லாமிய பெண்களை குறிவைத்து 3,042 சவரன் தங்க நகையை நூதன முறையில் பெண் ஒருவர் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் இழந்த நகைகளை மீட்டு தர கோரி 20 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் இரண்டாவது நாளாக இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மனைவி பாத்திமா நாச்சியா (வயது 45). இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்க நகை பாதுகாப்பு என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
இவர் சவரனுக்கு 1500 ரூபாய் தருவதாகவும் 15 நாட்களில் நகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனை அப்படியே நம்பிய சீர்காழி தாலுக்கா புங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மஜிலாபானு என்பவர் 502 சவரன் தங்க நகையை பாத்திமா நாச்சியாவிடம் கொடுத்து உள்ளார்.

நகை சேமிப்பு நிறுவனம்
இதனை அறிந்த மற்ற பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களது நகைகளை பாத்திமா நாச்சியாவிடம் கொடுத்து பணம் பெற்று இருக்கின்றனர். முதல் மூன்று மாதங்கள் பாத்திமா நாச்சியார் தான் கூறியபடி 15 நாட்களில் அவர்களிடம் நகைகளை திருப்பி கொடுத்து உள்ளார். இதனால் அவர் மீது மக்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

இழுத்தடித்த நாச்சியார்
ஆனால், முதல் 3 மாதங்களுக்கு பின்னர் நகைகளை கொடுக்காமல் இழுத்து அடித்து உள்ளார் பாத்திமா நாச்சியார். இதனால் சந்தேகம் அடைந்த நகை கொடுத்த பெண்களை தங்களது நகைகளை திருப்பிக் கொடுக்க நாச்சியாரிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதேதோ காரணங்களை சொல்லி அவர் சமாளித்து வந்து இருக்கிறார்.

எஸ்கேப் ஆன பாத்திமா
மக்கள் தன் மீது சந்தேகப்படுவதை சுதாரித்துக் கொண்ட பாத்திமா நாச்சியார், மயிலாடுதுறையில் தான் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு கும்பகோணத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு குடி பெயர்ந்து உள்ளார். அன்று முதல் தங்களது நகைகளை கேட்டு பலமுறை அலைந்து திரிந்த 502 சவரன் நகையை கொடுத்த மஜிலாபானு நேற்று தனது நகையை மீட்டு தரக்கோரி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை
புகாரின் பேரில் சீர்காழி போலீசார் சம்மன் அனுப்பி பாத்திமா நாச்சியாவை விசாரணைக்கு அழைத்தனர். பாத்திமா நாச்சியா சீர்காழி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார். இதனை அறிந்த பாதிக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் சீர்காழி காவல் நிலையத்தில் குவிந்து தங்களது நகைகளை மீட்டு தர வலியுறுத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குவிந்த பெண்கள்
இதனை அடுத்து இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நகையை இழந்த பாதிக்கப்பட்ட பெண்கள் திரண்டு வந்து தனித்தனியே மோசடி செய்த பெண் மீது புகார் மனு அளித்தனர். இதனை காவல்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன. அதன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இன்றைய மதிப்பு படி 3,042 சவரன் நகை ரூ.12.5 கோடியை தொடுகிறது.
-
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications