நடராசன் பேச்சை பார்த்தால் ஆர்.கே.நகரில் சசிகலாதான் அதிமுக வேட்பாளர் போலயே?
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அதிமுக வேட்பாளராக போட்டியிடக் கூடும் என தெரிகிறது.
சென்னை: ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக சசிகலாவே போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் இருப்பதை அவரது கணவர் நடராசனின் பேட்டி வெளிப்படுத்துவதாக தெரிகிறது.
உடல்நலக் குறைவால் காலமான ஜெயலலிதா சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவர் புதைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராசன், அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது; திருட முடியாது என அக்கட்சிக்கு உரிமை கோரும் தொனியில் பேசினார்.
ஏற்கனவே அதிமுகவை சசிகலாதான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நாடறிந்த உண்மை. ஆனால் முதல்வர் பொறுப்பு ஓபிஎஸ் கையில் இருக்கிறது. ஆட்சியையும் கட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதைத்தான் சசிகலா தரப்பு விரும்புகிறது. இதையே நடராசனின் பேட்டியும் சொல்லாமல் சொல்கிறது.

ஆர்கே நகர் தொகுதி காலி
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவால் அவரது ஆர்.கே. தொகுதி காலியாக உள்ளது. இத்தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கட்சிதான் முதலில்...
அதிமுக மீது மக்களுக்கு தற்போது அனுதாபம் இருக்கிறது. இந்த அனுதாபத்தை சிதைக்கும் வகையில் உடனடியாக எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டா என சசிகலா நினைக்கிறார். முதலில் கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் தக்க வைக்கும் நடவடிக்கைகளை உறுதி செய்வதிலேயே அவர்கள் தரப்பு முனைப்பாக இருக்கிறது.

அடுத்த டார்கெட் ஆட்சி...
அதே நேரத்தில் கட்சியை முழுமையாக கொண்டு வந்து மெல்ல ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றுவதுதான் சசிகலா தரப்பின் இலக்கு. இதனால் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய நெருக்கடி சசிகலாவுக்கு உண்டு.

கட்சி, ஆட்சியை தக்க வைக்க...
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றால்தான் கட்சி, ஆட்சி இரண்டையும் தங்களால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தே அடுத்த கட்ட நகர்வுகளை சைலண்ட்டாக மேற்கொள்ள் திட்டமிட்டுள்ளது சசிகலா தரப்பு.

தஞ்சாவூர் நிலவரம்
ஏற்கனவே தஞ்சாவூர் தொகுதி மறுதேர்தலில் சசிகலா போட்டியிடக் கூடும் எனக் கூறப்பட்டது. அதற்கான முயற்சிகளை நடராசன் மேற்கொண்ட போதும் அது பலனளிக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications