ஆட்சி கவிழ்ப்புக்கு படுதீவிரமாக முயற்சிக்கும் சசிகலா தரப்பு
எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர சசிகலா தரப்பு தீவிரம் காட்டுகிறதாம்.
சென்னை: சசிகலா தரப்பு மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்துவதில் எடப்பாடி மும்முரமாக இருக்கிறார். அதேநேரத்தில் எடப்பாடி ஆட்சியை கவிழ்த்தே ஆக வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வோம் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு.
தமிழக அரசியலில் அடுத்த ஆடுபுலி ஆட்டம், கூவத்தூர் கூத்துகள் தொடங்குவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன. வலிமையான நேர்மையான ஐபிஎஸ் ஸ்குவாடை உருவாக்கி சசிகலா தரப்பு மீது வழக்குகள் போடுவதற்கு தயாராகி வருகிறது எடப்பாடி அண்ட் கோ.

நம்பிக்கை இல்லா தீர்மானம்
இதற்கு செக் வைக்கும் வகையில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலம் கொண்டுவருவதில் மும்முரமாக இருக்கிறது சசிகலா தரப்பு. இத்தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் லாபிகளில்தான் இப்போது சசிகலா தரப்பு படு தீவிரமாக இருக்கிறதாம்.

எதிர்க்கட்சிகள்
குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான லாபிகள் என்ன என்பதில் ரொம்பவே தீவிரம் காட்டுகிறார்களாம். தங்களுக்கு போக்கு காட்டும் அரசாக இது விஸ்வரூமபெடுக்க விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை வேகம் காட்டுகிறதாம் சசி தரப்பு.

உளவுத்துறை
இதை அறிந்துதான் எடப்பாடி அண்ட் கோவும் எம்.எல்.ஏக்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறாராம். அத்துடன் சசிகலா தரப்பில் அனைவரையும் மிக உன்னிப்பாக கவனித்து தகவல் தர உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

அவர்தான் சிக்கலாம்
கோட்டையிலும் கடந்த சில நாட்களாகவே உளவுத்துறையின் முக்கிய அதிகாரியிடம் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. இதுவரை தம்முடன் கை கோர்த்து வந்த சசிகலா தரப்பைச் சேர்ந்தவருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தராததால் அவர்தான் ஆட்சி கவிழ்ப்பு அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கிறாராம். அவரது செயல்பாடுகள் குறித்தே அந்த உளவுத்துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம் எடப்பாடி.
-
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
தைலாபுரத்தில் சசிகலாவுக்கு கமகம விருந்து.. கூட்டணி உறுதியானதால் ராமதாஸ் ஏற்பாடு -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications