அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் அனைவர் ஆதரவும் எங்களுக்கே.. இரட்டை இலை வழக்கில் முதல்வர் தரப்பு வாதம்
சென்னை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் முன்வைத்தார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சி.எஸ். வைத்தியநாதன், விஜயகுமார், குரு கிருஷணகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

டி.டி.வி. தினகரன் தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஹன்ஸாரியா, சேதுராமன் ஆகியோர் ஆஜராகி வாதாடி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "அதிமுகவில் தற்போது பிளவு இல்லை. கருத்து வேறுபாடுகளை களைந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இணைந்து விட்டனர். மேலும் பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு தற்போது எங்களுக்கு தான் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
டிடிவி தினகரன், சசிகலா ஆகிய இருவரும் கிரிமினல் வழக்கு பின்னணி உடையவர்கள் என்பதாலும் சசிகலா கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் 4 ஆண்டு தண்டனை அனுபவிக்கிறார் என்பதாலும் அவர்களுக்கு இரட்டை இலையை கொடுக்க கூடாது.
முதல்வர் தரப்பில் வாதிடுகையில், 42 எம்பிக்கள், 116 எம்எல்ஏக்கள், 2000 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும், 6 எம்பிக்களும் தினகரன் பக்கம் உள்ளனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் பிரமாண பத்திரங்களை ஏற்றுகொள்ளக் கூடாது. ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள், அவர்களில் 95% எங்கள் பக்கமே உள்ளனர்.
குடும்ப ஆட்சியை கட்சியில் கொண்டுவர சசிகலா முயற்சி செய்கிறார். சிறைக்கு போனபோது வேறு வழியின்றி, தினகரனை பொதுச்செயலராக்கினார் சசிகலா. இவ்வாறு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications