இமாலய வெற்றி பெற்ற தினகரன் தலைமையில் செயல்பட தயார்.. சசிகலா புஷ்பா அந்தர் பல்டி!
தினகரன் தலைமையில் செயல்பட தயார் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சசிகலா குடும்பத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா இன்று திடீரென தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் தினகரன் தலைமையை ஏற்று தாம் செயல்பட தயாராக உள்ளதாகவும் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் சசிகலா புஷ்பா. ராஜ்யசபாவிலேயே ஜெயலலிதா தம்மை தாக்க முயன்றதாக கூறி புயலைக் கிளப்பினார் சசிகலா புஷ்பா.

தனி ஆவர்த்தனம்
யலலிதா மறைவுக்கே சசிகலா குடும்பமே காரணம் என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதிமுகவில் அணிகள் சுக்குநூறாக சிதைந்த போதும் டெல்லியிலேயே முகாமிட்டு டெல்லி லாபியை பலப்படுத்தி வந்தார்.

செய்தியாளர்களுடன் சந்திப்பு
இந்நிலையில் இன்று திடீரென சென்னை பெசன்ட் நகரில் தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சசிகலா புஷ்பா. பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:

மகத்தான வெற்றி
ஆர்.கே. நகரில் அண்ணன் தினகரன் இமலாய வெற்றியைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளார். ஆளும் கட்சியை எதிர்த்து தினகரன் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

அஞ்சாமல் போராடி வென்றவர்
எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சாமல் நின்று போராடி வென்றுள்ளார் தினகரன். ஆர்.கே.நகர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தினகரன் தலைமையை ஏற்று உழைக்கத் தயாராக உள்ளோம்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications