வடகிழக்குப் பருவமழை: பாடங்களை விரைந்து முடிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்!
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதையடுத்து பாடங்களை விரைந்து முடிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பாடங்களை விரைந்து முடிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்கள் தொடர்ந்து மழை பெய்யும். சில நேரங்களில் புயல்கள் உருவாகவும் வாய்ப்பு உண்டாகும்.
தொடர் மழை காரணமாக தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கும். கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.

முன்கூட்டியே பாடங்களை முடிக்க
இதனால் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் விடுமுறையால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்கூட்டியே பாடங்களை நடத்தி முடிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு சராசரியாக பெய்யும்
தமிழகத்தில் இதுவரை வடகிழக்குப் பருவமழை தொடங்காத நிலையில் நவம்பர் முதல்வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டு சராசரி அளவு மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

நீர்நிலைகள் நிரம்பியுள்ளது
அதேநேரத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.

மழையால் தண்ணீர் தேக்கம்
இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications