குரல் வாக்கெடுப்பின் மூலம்... சட்டசபையில் 7 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
சென்னை: மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டசபை குளிர்காலக் கூட்டத்தொடரில், நேற்று குரல் வாக்கெடுப்பின் மூலம் 7 சட்ட மசோதாக்கள் நிறைவேறியுள்ளன.
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த வியாழன் அன்று தொடங்கி, நேற்று முடிவடைந்தது. மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த கூட்டத் தொடரில், நேற்று 7 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான இழப்பீடு அளிப்பது குறித்த சட்ட மசோதா, தமிழ்நாடு நிதி ஒதுக்கச் சட்ட மசோதா, உள்ளாட்சி நிதித் தணிக்கை சட்ட மசோதா, அண்ணாமலை பல்கலைக்கழக (திருத்த) சட்ட மசோதா, தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி (திருத்த) சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்ட மசோதா மற்றும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான தீர்மானம் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன.
சட்டசபையில் இவை நிறைவேற்றப்படுவதற்காக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி (திருத்த) சட்ட மசோதா நிறைவேறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மசோதா நிறைவேறினால், சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு லாபமும், மக்களுக்கு சர்க்கரை விலையினால் சுமை வந்து சேரும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் சர்க்கரையில் விலை மாற்றம் இருக்காது என்று உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த சட்ட மசோதா நிறைவேறியது.
இதேபோல், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் தொடர்பான அரசினர் தீர்மானத்தை, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாருல்லா ஆகியோர் எதிர்த்தனர். மத்திய அரசின் இந்த சட்டத்தால், நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார். ஹைகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் கருத்தைக் கேட்கும் வாய்ப்பு இந்த சட்டத்தில் இல்லை என்று ஜவாருல்லா குறிப்பிட்டார். ஆனபோதும், குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேறியது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications