“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்'.... சென்னையை மீட்டுக் கொடுத்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் பிறந்த நாள் இன்று.
Recommended Video

சென்னை: 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது மதராஸ் மனதே என கோஷம் எழுப்பியது ஆந்திரா. ஆனால் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என கர்ஜித்து போராடி சென்னையை மீட்டெடுத்த சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் பிறந்த நாள் இன்று.
தேசத்தின் விடுதலைக்குப் போராடிய கட்டபொம்மனையும் வ.உ.சிதம்பரனாரையும் தமிழ் உலகம் இன்றளவும் நினைவில் வைத்திருக்க காரணமாக இருந்தவர் ம.பொ.சிவஞானம். இவர் எழுதிய நூல்களின் அடிப்படையில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் திரைப்படங்கள் உருவாகின.

போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக திகழ்ந்த ம.பொ.சி, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போதும் தேசத்தின் விடுதலையின் மீது அக்கறை கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுமார் 6 ஆண்டுகாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாக 1946-ம் ஆண்டு தமிழரசுக் கழகத்தை தொடங்கினார் ம.பொ.சி. சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி போராடியது தமிழரசு கழகம். 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அப்போது சென்னை மாநகரை மதராஸ் மனதே என்ற முழக்கத்துடன் ஆந்திரா உரிமை கோரியது. ஆனால் தலைநகர் சென்னையை தலைகொடுத்தேனும் காப்போம் என சிங்கமென கர்ஜித்தார் ம.பொ.சி.
தமிழகத்தின் வடக்கு எல்லைகளை ஆந்திராவும் தென் எல்லைகளை கேரளாவும் உரிமை கோரின. இதற்கு எதிரான கிளர்ச்சிகளை தீரமுடன் நடத்தியவர் ம.பொ.சி. உள்ளாட்சியிலும் சட்டசபையிலும் திறம்பட பணியாற்றினார். 1978 முதல் 1986 வரை சட்ட மேலவையின் தலைவராகவும் பணியாற்றினார். ம.பொ.சி. எழுதிய மொத்த நூல்கள் 150.
1950-ம் ஆண்டு பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளைதான் ம.பொ.சி.க்கு சிலம்புச் செல்வர் என பட்டம் வழங்கினார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது 1972-ம் ஆண்டு ம.பொ.சி.க்கு வழங்கப்பட்டது. 1995-ம் ஆண்டு 89 வயதில் உடல்நலக் குறைவால் ம.பொ.சி. காலமானார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications