நடிகர் சிம்புக்காக ரத்தினகிரி கோவிலில் மண்டியிட்டு படிக்கட்டுகளில் ஏறிய ரசிகர்கள்..நெகிழ்ச்சி காரணம்
ராணிப்பேட்டை: நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டி,. ரத்தினகிரி முருகன் கோவிலில் மண்டியிட்டு படிக்கட்டுகளை ஏறி சிறப்பு பிரார்த்தனையில் அவரது ரசிகர்கள் ஈடுபட்ட செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Recommended Video
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி முருகன் கோவிலில் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டி அவரது ரசிகர்கள் கோவில் படிக்கட்டுகளை மண்டியிட்டபடி ஏறிச்சென்று சிறப்பு பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

சிம்பு ரசிகர் நற்பனிமன்ற ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் மச்சி மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான சிம்பு ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக சாலையோரங்களில் ஆதரவின்றி தவித்தவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கினர். பின்னர் மலைமீது அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் ஆலயத்தில், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மண்டியிட்டு கோவில் படிக்கட்டுகளை ஏறியவாறு சென்றனர்.

இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சிம்பு ரசிகர்களின் இந்த செயல் காண்பாரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது












Click it and Unblock the Notifications