என்னாச்சு அனிதா குப்புசாமிக்கு அதிமுகவுக்கு டாட்டா சொல்லிவிட்டார்!
பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி அதிமுகவில் இருந்து விலகியுள்ளார்.
Recommended Video

சென்னை : பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வேறு எந்த அணியிலும் சேரும் முடிவில் தான் இல்லை என்று கூறியுள்ளார்.
நாட்டுப்புறப்பாடகி, சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் அனிதா குப்புசாமி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மொழியில் கிராமியப் பாடல்களை அச்சுபிசகாமல் பாடுவதில் திறமையானவர்.
கர்நாட இசை, நாட்டுப்புறப் பாடல்கள் என்ற மேடைக்கச்சேரிகளில் அனிதா மற்றும் அவரது கணவர் குப்புசாமியின் உற்சாகம் பார்வையாளர்களை குஷிப்படுத்தும். பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமியை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2013ல் அதிமுகவில் சேர்ந்தார்
இசையில் மட்டுமல்ல அரசியலிலும் தனக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக கடந்த 2013ம் ஆண்டில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் அனிதா குப்புசாமி. அதிமுகவில் அனிதா இணைந்த சமயத்தில் ஜெயா தொலைக்காட்சியில் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

தேர்தல் பிரச்சாரம்
சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுகவிற்காக அனலாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் அனிதா குப்புசாமி. அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக அனிதா குப்புசாமி வலம் வந்து கொண்டிருந்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு பாடல் மூலம் விமர்சனம்
அதிமுக மேடைகளில் பாரபட்சமே இல்லாமல் எதிர்க்கட்சிகளை கிழித்து நார்நாராக தொங்கவிடும் வகையில் இருக்கும் இவரது பேச்சுகள். சில நேரங்களில் பாட்டாகவே பாடி அதிமுகவினரை குஷிபடுத்தியுள்ளார் அனிதா.

அனிதா விலகல் அறிவிப்பு
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து சிலர் ஒதுங்கியும், சிலர் வெளியேறியும் வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக அனிதா குப்புசாமி அறிவித்துள்ளார்.

முடிவு செய்யவில்லை
சென்னை ஆர்ஏ புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் இனியும் அதிமுகவில் தொடரப்போவதில்லை என்றார். வேறு அணியில் சேரும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் அனிதா தெரிவித்துள்ளார்.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications